[Welcome to the Sri Vaishnava Network] Sri Vaishnava Network
In the service to the Lotus feet of Sriman Narayana...

Tuesday, October 07, 2008

ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி ஆலயம்

ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி ஆலயம்

திருவுக்கும் திருவாகிய செல்வனாகிய மாலவன் மகிழ்ந்து இனிதுறையும் திருத்தலங்களுள் ஒன்று நெல்லை மாவட்டம்,தென்காசி வட்டத்தில் இருக்கும் மேலப்பாவூர் கிராமம்.

ஆலயத்தின் மூலவரின் திருநாமம் "அழகிய மன்னார்"; கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்; சுதைச் சிற்பம்; ஸ்ரீ தேவியும், பூதேவியும் இரு மருங்கிலும் திகழ்கின்றனர்; பிருகு முனிவரும், மார்க்கண்டேயரும் வழிபட்ட திருத்தலம்.

அழகிய திராவிட பாணியில் அமைந்துள்ள இந்த ஆலயம் தென்காசிப் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தது. கல்வெட்டுக் குறிப்புகளின்படி இந்த ஆலயம் கி.பி 1545 ல் ஜடில வர்மன் என்ற பராக்ரம பாண்டியனால் புனரமைக்கப் பட்டது . இம்மன்னன் அபிராம பராக்ரம பாண்டியனின் புதல்வனாவான். ஆலயத்தினுள் காணப்படும் இரு கல்வெட்டுகள் இவற்றை அறிந்துகொள்ள உதவுகின்றன.
இத்தகவல்களை உறுதி செய்து சான்றிதழ் அளித்திருப்பவர் –

Dr. M.D.Sampath, M.A., Ph.D.
Director of Epigraphy
MYSORE – 570 017

அன்பர்கள் பெருமுயற்சி செய்து சுதை வேலைகளை நிறைவேற்றியுள்ளனர். இதுகாறும் ரூ.5 லக்ஷம் மதிப்பிலான பணிகள் நிறைவேறியுள்ளன. திருமதில், தளவரிசை, ஆழ்துழாய்க்கிணறு, கொடிமரம், மஹா ஸம்ப்ரோக்ஷணம் போன்ற செலவுகளுக்கும், நிரந்தர வைப்பு நிதிக்குமாக ரூ.20 லக்ஷம் தேவைப்படுகிறது. 80-G வரிச்சலுகை புதுப்பிக்கப்பட உள்ளது. அன்பர்கள் அனைவரையும்
பங்கு கொள்ளுமாறு பணிவுடன் அழைக்கிறோம்.

திருப்பணிக்குழுப் பொறுப்பாளர்கள் –
திரு.D.ராமகிருஷ்ணன்
49/103 B, தெற்கு மாசி வீதி
தென்காசி – 627 805

திரு. P. வேங்கடராமன்
66, அக்ரஹாரம்
மேலகரம் – 627 818

வங்கிக் கணக்கு எண் –
S.B A/C No.15055 I.O.B TENKASI BR.
S.B A/c No.609001001101 Sri Ramabajana Sabha Melappavur Br.

மின்னஞ்சல் தொடர்பு – R.தேவராஜன்/சென்னை
rdev97 (at) gmail.com

ஆலயத்தின் வலைப்பதிவு: http://srirajagopalaswamy.blogspot.com



Source Courtesy: An email from DevRaj (rdev97 (at) gmail.com)



Windows Live Spaces

Labels:

0 Comments:

Post a Comment

<< Home